மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, விநாடிக்கு 31 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. அதே போல், கேஆர்எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.