பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பின் போது பெய்ரூட் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சமய இடத்திற்கு விரைந்துள்ளனர். பெய்ரூட் துறைமுக பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பாதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை.