×

குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் உலா வரும் காட்டுயானைகள்

குன்னூர்: குன்னூர்  மலைப்பாதையில் அவ்வப்போது குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் குன்னூர்,பர்லியாறு பகுதியில் பலா பழ சீசன் என்பதால்,  மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளது.  

தற்போது மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் தவிர்த்து இதர வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது.  இது நாள் வரை வாகனங்கள் இல்லாததால்  யானைகள் மகிழ்ச்சியாக சாலையில் உலா வந்தன. ஆனால் தற்போது வாகனங்கள் அதிகரித்துள்ளதால் அவை வாகனங்களை கண்டு அச்சமடைந்துள்ளன.   மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.



Tags : Coonoor Hills , Wild elephants ,Coonoor,cubs
× RELATED மேட்டுப்பாளையம் - குன்னூர்...