×

திம்பம் மலைப்பாதையில் கோழி லாரி கவிழ்ந்து விபத்து: 300 கோழிகள் பலி

சத்தியமங்கலம்:திம்பம் மலைப்பாதையில் கோழி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 300 கோழிகள் உயிரிழந்தன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இருந்து 3 ஆயிரம் கோழிகள் லாரியில் ஏற்றப்பட்டு கர்நாடக மாநிலம் மங்களூர் செல்வதற்காக நேற்று காலை திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. 7வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் அதிலிருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.
தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் உடனடியாக கிரேன் வரவழைத்து லாரியை தூக்கி நிறுத்தினர். இறந்த கோழிகள் லாரியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து உயிருடன் இருந்த கோழிகள் வேறு லாரிக்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Thimphu , Thimphu hillside, chicken lorry, overturned accident, 300 chickens killed
× RELATED பூட்டான் நாட்டில் நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி