சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19.58 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6.65 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8.49 லட்சம் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.