×

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், காமாட்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலி தொழிலாளி. இவரது மகன் சுஜித்வேலன் (8). நேற்று மாலை வெங்கடேஷ், அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தனது மகனுடன் குளித்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்த சுஜித்வேலன், தண்ணீரில் மூழ்கினான். தகவலறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர். புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : In the water, drowning, the boy dies
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்