×

‘கோயம்பேடு செயல்பட அனுமதிக்க வேண்டும்’

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஊரடங்கு தளர்வில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே மாதிரியாக இயங்க கால நீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மூடி வைக்கப்பட்டுள்ள குறிப்பாக கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீதான சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற்றை 6 மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Coimbatore , Coimbatore act, let
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு