ஐதராபாத்: ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் அதிபர் நரசிம்மா ரெட்டி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அவர்கள் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.