சென்னை: வீட்டு வாடகை கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தவர்க்கு அபராதம் விதிக்க நேரிடும் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சார்லஸ் என்ற வழக்கறிஞருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் வாடகை வசூலிக்கக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தகவல் தெரிவித்துள்ளார். மனுவை சீசரித்த ஐகோர்ட் நீதிபதிகள் வாடகை வசூலிப்பதற்கு தடை விதிக்க சாத்தியமில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.