×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்பத் தகராறில் மனைவி கொலை!: தடுக்க வந்த 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!!

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவன், தடுக்க வந்த 3 பேரையும் வெட்டிசாய்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அடுத்த அக்கறைதத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீரமணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகனை வீரமணிகண்டனும், 9 வயது இளைய மகனை பவித்ராவும் வளர்த்து வந்தனர். இதையடுத்து பெற்றோருடன் வசித்து வரும் பவித்ராவிடம் அடிக்கடி வீரமணி குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல நேற்றிரவு நண்பர் ராம்குமாருடன் குடித்துவிட்டு மனைவியின் வீட்டிற்கு சென்ற வீரமணிகண்டன் தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்தி, தாயார் அமுதா, பாட்டி சீத்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் அவர் வெட்டியுள்ளார்.

பின்னர் இவர்களது அலறல் சட்டம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் இருந்த அனைவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மற்ற மூவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மனைவியை கொலை செய்த கணவர் வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை கைது செய்த பவானி சாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : family dispute ,district ,Sathyamangalam ,Erode , Wife killed,family dispute , Sathyamangalam, Erode ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி