சென்னை: சென்னை வடபழனி நகை பட்டறையில் 118 சவரன் நகைகளை திருடிய ஊழியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானம் மூலம் தப்பிச்செல்ல முயன்ற மேற்கு வங்க ஊழியர் ரகுமானை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பெங்களூருவில் கைதான நகைப்பட்டறை ஊழியரை சென்னை கொண்டுவர வடபழனி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.