பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம் சோழன் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சூரஜ்குமார் (45). பட்டாபிராம், கோபாலபுரம் மெயின் ரோட்டில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையின் இரும்பு ெஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. தகவல் அறிந்த சூரஜ்குமார் விரைந்து வந்து பார்த்தபோது, கடையின் இரும்பு லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் உடைக்க முடியாதால், திரும்பி சென்றனர். மேலும், அவர்கள் அங்கிருந்து போகும் முன்பு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர். கருவியை திருடி சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சியால் லாக்கரில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை தப்பியது. இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.