×

கேரளாவில் 4 நாட்கள் கனமழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இன்று இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும், நாளை (4ம் தேதி) கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உட்பட 9 மாவட்டங்களிலும், 5ம் தேதி இடுக்கி, மலப்புரம் உட்பட 6 மாவட்டங்களிலும், 6ம் தேதி கோழிக்கோடு வயநாடு உட்பட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 9 மாவட்டங்களுக்கும், நாளை 5  மாவட்டங்களுக்கும், 5ம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 6ம் தேதி 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64 .5 மிமீ முதல் 115.5 மிமீ வரை பலத்த மழை  பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala. , Kerala, 4 days, heavy rain, warning
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...