×

2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 போலீசாருக்கு கொரோனா: பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 1,718 ஆக உயர்வு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் 2 சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 போலீசாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை கொத்தாவால்சாவடி சட்டம் ஒழுங்கு பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு ஐஐடி மற்றும் காவலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 நேரடி தொடர்பில் இருந்த போலீசார் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை மொத்தம் தொற்று எண்ணிக்கை 1,718 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்றில் இருந்து குணமடைந்து 5 பேர் பணிக்கு திரும்பினர். இதையடுத்து  நேற்று வரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,335 ஆக உயர்ந்துள்ளது.

Tags : policemen ,inspectors ,Corona ,victims , 2 inspectors, 14 policemen, Corona, to 1,718, rise
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்