×

அவமதிப்பு எதிரொலி: தலைவர்கள் சிலைகளுக்கு கூண்டு அமைப்பு

அறந்தாங்கி: தலைவர்களின் சிலைகளை சில விஷமிகள் அவமதிப்பு செய்து வரும் நிலையில், அறந்தாங்கியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் நாட்டிற்கும், மக்களுக்கும் செய்த சேவைகளை எதிர் வரும் தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சிலைகள் அமைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு அந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களின்போது தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அதேபோல அவர் சார்ந்த கட்சியினர் வெற்றி விழாக்களின்போதும் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கமான நடைமுறை.

இந்த நிலையில் சமீபகாலமாக சமூக விரோதிகள் மக்களிடம் குழப்பத்தை விளைவிப்பதற்காக அந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் வகையில் ஏதாவது செய்யக்கூடாத செயலை செய்து விடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு கெடும் அளவிற்கு பிரச்னை பெரிதாகி விடுகிறது. இந்த நிலையில் தலைவர்களின் சிலைகளுக்கு அவதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க சிலைகளை சுற்று கூண்டு அமைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அறந்தாங்கியில் உள்ள அண்ணாசிலை, காமராஜர்சிலை, எம்.ஜி.ஆர் சிலை, பெரியார் சிலைகளில் தற்போது அண்ணாசிலை, காமராஜர் சிலைகளை சுற்று இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற சிலைகளுக்கும் கூண்டுகள் அமைக்கப்பட உள்ளது. தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களின் மட்டும் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கப்படும் என தெரிகிறது. மற்ற நாட்களில் கூண்டுகள் பூட்டப்பட்டிருக்கும்.

Tags : leaders , Insult, statue of leaders, cage system
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...