×

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இளம்பெண் தற்கொலை முயற்சி: காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி!!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேற்கு பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கும்பத்தில் பல நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு உதவுவதுபோல நடித்த உதவி ஆய்வாளர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

அப்போது கர்ப்பமடைந்த அந்த பெண்ணை கட்டாய கருக்கலைப்பும் செய்யவைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட ஆட்சியர் வரை சென்றும் புகாரளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் விரக்தியடைந்த அந்த பெண் அதிளவுக்கதிகமாக தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மாதர் சங்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுபோன்ற பாலியல் தொந்தரவால் எடுக்கப்படும் தற்கொலை முடிவு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : district ,suicide ,teenager ,Kanyakumari ,Marthandam ,police inspector , Kanyakumari, Marthandam, Suicide, Police Inspector
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...