×

தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி இளைஞரை அழைத்துவந்து மருமகளை தாக்கிய அவலம்..!! காதலித்து திருமணம் செய்ததால் மாமியார் வீட்டில் கொடுமை!!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி இளைஞர் ஒருவரை அழைத்து வந்து மருமகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த ரஜிதாவும் மல்லேஷ் என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 மாதங்களே ஆன பெண்குழந்தை ஒன்று உள்ளது. இதனையடுத்து காதல் திருமணத்தை ஏற்காத மல்லேஷின் தாய் அந்த பெண்ணிற்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளார்.

அதிலும் தற்போது கொடுமையின் உச்சகட்டமாக, மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் வலியால் அலறி துடிதுடித்தாள். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. பின்னர் இளைஞரின் தாக்குததால் பலத்த காயமடைந்த இளம்பெண் சுயநினைவை இழந்தார். இதனையடுத்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொடுமை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : daughter-in-law ,Mother-in-law ,Telangana ,home , Telangana, marriage, mother-in-law, cruelty
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி