சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் வார்டில் மகேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் மகேஷூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.