×

சென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: விதிமீறி வெளியில் சுற்றினால் வழக்கு: கண்காணிக்க 193 சோதனை சாவடிகள்

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இன்று பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதை கண்காணிக்க நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அவசியமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது. இது தொடர்பாக சந்தேகங்களுக்கு போக்குவரதது காவல் கட்டுப்பாட்டு அறையை 044-23452330, 044-23452362 அல்லது 90003130103 என்ற எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம், என கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai , Chennai, full curfew, 193 check posts
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...