×

ஏரி, குளங்களில் களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க முன்னாள் வாரிய தலைவர் சேம.நாராயணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இந்த ஆண்டு வருகிற 22ம் தேதி (சனி) விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேலையும் இல்லாமல் வியாபாரமும் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்களில் களிமண் எடுத்துக் கொள்ளவும், அவர்கள் செய்யும் பலவிதமான விநாயகர் சிலைகளை எப்போதும்போல் இந்த ஆண்டும் வியாபாரம் செய்ய வும் தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : lake , Lake, ponds, clay, pottery workers
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு