×

ஜார்ஜியாவில் ஒரே முகாமில் பங்கேற்ற 200 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டபிலிசி: ஜார்ஜியா நாட்டில் முகாம் ஒன்றில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 முதல் 27 வரை நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 597 பேர் பங்கேற்றுள்ளனர். 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் என வெவ்வேறு வயதினர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாமில் பங்கேற்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 51 சதவிகிதம் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 அன்று பங்கேற்ற பிள்ளைக்கு குளிர் காய்ச்சல் இருந்ததால் முகாமை விட்டு வெளியேறியுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் முகாம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் சுமார் 260 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் தற்போது ஊரடங்கு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஜார்ஜியாவில் குழந்தைகளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : exposure ,children ,Corona ,camp ,Georgia , Georgia, child, corona
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...