×

தமிழகத்தில் நம்பிக்கையூட்டும் குணமடைந்தோர் எண்ணிக்கை: இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 99 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : healers ,Tamil Nadu ,Corona ,home , Tamil Nadu, Number of healers, Corona
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...