×

குலதெய்வங்களை தரிசிக்க முடியாமல் தவிக்கும் பக்தர்கள்: கோயிலுக்கு வெளியே பொங்கலிட்டு வழிபாடு

திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, குலதெய்வங்களை தரிசிக்க முடியாமல் தவிக்கும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியே பொங்கலிட்டு வழிபட்டு செல்கின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடி மாதங்களில் பக்தர்கள் தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிவெள்ளி திருவிழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோயிருக்கு வர வேண்டாம் என கோயிலுக்கு வெளியே அறிவிப்பு பலகை வைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, குலதெய்வ கோயிலுக்கு வந்த பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும், கோயிலுக்கு வெளியே பொங்கலிட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

Tags : Devotees ,temple , Deities, devotees, worship
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...