×

கீழ்பென்னாத்தூர் அருகே பரபரப்பு; கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த ஐங்குணம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியால் காற்று மாசுபாடு ஏற்பட்டு வந்ததால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்குவாரிக்கான ஏலம் விடப்பட்டு, மீண்டும் பணி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையறிந்த, கிராம மக்கள் நேற்று கல்குவாரி அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்குவாரி அமையும் மலையை சுற்றிலும் விவசாய நிலம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளது. ஏற்கனவே இந்த குவாரியால் மாசு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வெடிசத்தம் அதிகரித்து கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடிவதில்லை. எனவே, விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் கல்குவாரிைய மீண்டும் செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினர். மேலும், இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Demonstration ,Unrest ,Lower Pennathur ,quarry , Lower Pennathur, Kalkuvari, Demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்