×

சார்ஜா, ஓமன் நாடுகளில் தவித்த 317 இந்தியர்கள் மீட்பு

சென்னை:  சார்ஜா, ஓமன் நாடுகளிலிருந்து 2 மீட்பு சிறப்பு விமானங்கள் நேற்றுமுன்தினம்  இரவு சென்னை வந்தனர். இதில், 317 பேர் வந்தனர். ஓமனிலிருந்து வந்த 4 பெண்கள் உட்பட 44 இந்தியர்கள் முறையான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள். இவர்கள் 44 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் நேற்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். பின்பு பல்லாவரம் ராணுவ முகாமிற்கு பலத்த காவலுடன் அனுப்பப்பட்டனர்.

இவர்கள் தவிர 273 பேரில் 156 பேர் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 117 பேரும் அனுப்பப்பட்டனர். அபுதாபியிலிருந்து நேற்று அதிகாலை சிறப்பு மீட்பு விமானம் 136 இந்தியர்களுடன் சென்னை வந்தது.


Tags : Indians ,Sharjah ,Oman 317 Indians ,Oman , Sharjah, Oman, Indians, Rescue
× RELATED ரஷித் கான் சுழலில் மூழ்கியது அயர்லாந்து