சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல்: அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையாவின் மூத்த சகோதரர் கே.கரிபால்டி, கொரோனா தொற்றால் மரணமடைந்து விட்டார்.
சகோதரரை இழந்து வாடும் சின்னையாவுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், கரிபால்டி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.