×

ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடை மூடல் அரசு அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஊரடங்கின் போது 4 ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதே போல,ஆகஸ்ட் மாதம் முழுவதும் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
7ம் கட்ட ஊரடங்கை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

அதன்படி, 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்களது மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் கடைகள் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


Tags : closure ,store ,Government ,Tasmac , Sundays, Tasmac Store
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!