கும்மிடிப்பூண்டி: திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காணொலி காட்சி மூலம் அவசர செயற்குழு கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் தலைவர் கலைஞரின் நினைவு தினம், கழக ஆக்கப்பணிகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.