×

வாலிபர் கொலையில் 5 பேர் சிக்கினர்: 2 பேருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த ஆதனஞ்சேரி கிராமம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் அஜய்பிரசாத் (20). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 29ம் தேதி அஜய்பிரசாத் தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். வண்டலூர் - வாலாஜாபாத்  சாலை ஆரம்பாக்கம் கூட்டு சாலை அருகே சென்றபோது, 2 பைக்கில் வந்த 6 ேபர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அஜய்பிரசாத் கடந்த ஓராண்டுக்கு முன் ரவுடி கும்பலுடன் இருந்துள்ளார். அவர் மீது மணிமங்கலம் காவல் நிலையத்தில்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையொட்டி முன் விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் பில்லாந்தியை சேர்ந்த அப்பத்தா (எ) விக்கி (23), செங்கல்பட்டு மாவட்டம் தையூரை சேர்ந்த சார்புமணி (எ) ஜோதிமணி  (20), திருவண்ணாமலை மாவட்டம் பையூரை சேர்ந்த சின்னா (எ) விக்னேஷ்வரன் (20), பல்லு (எ) சந்துரு(20), படப்பை  அம்பேத்கர் நகர் மணிகண்டன் (22) ஆகியோரை நேற்று  கைது செய்தனர். விசாரணையில், அப்பத்தா (எ) விக்கி படப்பையில் தங்கி, அதே பகுதியில் உள்ள காஸ் கம்பெனியில் வேலை செய்கிறார்.  கடந்த மே மாதம் ஆதனஞ்சேரி கிராமத்தில் விக்கியுடன், நண்பர்கள் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவ்வழியாக ெசன்ற அஜய்பிரசாத்தை கேலி செய்தனர்.

இதனால் அஜய் பிரசாத், விக்கியுடன் தகராறு செய்தார். அதில், கை கலப்பாக மாறியது. அந்த நேரத்தில் அஜய்பிரசாத், பீர் பாட்டிலை எடுத்து விக்கியின்  தலையில் அடித்து காலில் குத்தினார். இதையொட்டி, இருவருக்கும் அடிக்கடி  அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஜய் பிரசாத்தை கொலை செய்ய விக்கி திட்டமிட்டார். அதன்படி, அஜய்பிரசாத் வேலைக்கு செல்வதை நோட்டமிட்ட மணிகண்டன், விக்கியிடம் கூறினான். அதன்பேரில், சம்பவத்தன்று அஜய்பிரசாத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது என போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார், 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : murder
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...