×

புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மத்திய அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன்காரணமாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அம்மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்ட முடிவில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குள் வருபவர்களும், மாநிலத்தை விட்டு வெளியே செல்பவர்களும் இபாஸ் பெற வேண்டியது அவசியம் எனவும், பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை திறக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.



Tags : Narayanasamy ,Pondicherry , Narayanasamy, Pondicherry, Lockdown Extension
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...