விஜயவாடா: ஆந்திராவில் அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய 3 தலைநகரங்கள் அமைக்க ஆளுநர் விஷ்வ பூஷன் ஹரிசந்தன் ஒப்புதல் அளித்துள்ளார். அமராவதியை தலைமை செயலக தலைநகரமாகவும், விசாகப்பட்டினத்தை பொருளாதார வளர்ச்சி தலைநகரமாகவும் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளார். கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் பிரித்து சட்டப்பேரவையில் ஆந்திர அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.