டெல்லி: இந்தியாவில் ஆக. 31 வரை சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதை அடுத்து சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை அழைத்து வர மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.