×

ஸ்ரீரங்கம் பிரசாதம், காவிரி ஆற்று மணல் ஆகியவை அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அனுப்பிவைப்பு

திருச்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனித நீர், பிரசாதம், பூஜை பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ராமரின் குல தெய்வ கோவிலாக கருதப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து பிரசாதம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பிரசாதத்தை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் சேர்ப்பதற்கு இந்து அமைப்பின் நிர்வாகிகள் கொண்டு செல்கின்றனர். அதே போல் காவிரி ஆற்று மணலும் ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



Tags : temple ,Ayodhya ,river sand ,Cauvery ,Srirangam ,Ram , Srirangam offerings and Cauvery river sand sent to the Ram temple in Ayodhya
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...