×

வனத்துறையினரால் தாக்கி உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்து உடலை வாங்க 8 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் ஒப்புதல்

தென்காசி : தென்காசியை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.  நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து உடலை பெற்றுக் கொள்கிறோம் என்று விவசாயி மகள் வசந்தி தெரிவித்துள்ளார். எட்டு நாட்களுக்குப் பிறகு உடலை வாங்கிக் கொள்ள உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 22ம் தேதி வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


Tags : Relatives ,purchase ,foresters ,places ,Government of Tamil Nadu ,wedding event , Forest, farmer, embankment, pearl,, relatives, approval
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு