×

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை மர்மநபர்களால் சேதம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு திமுக சார்பில்  சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரது மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டது

அண்மை காலமாக தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதால் இந்த மூன்று சிலைகளுக்கும் பாதுகாப்பு குண்டு அமைக்க முடிவு செய்த திமுக நிர்வாகிகள், சிலையை பார்வையிட்டு அளவீடு செய்ய சென்றுள்ளனர். அப்போது  தந்தை பெரியார் சிலையின் முகம் மற்றும் கண்ணாடி ஆகியவை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்க்கு இடையே சிலை சேதப்படுத்தப்பட்டதை சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளிட்ட மீஞ்சூர் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : persons ,district ,Minjoor ,Periyar ,Tiruvallur , Father, Periyar,statue ,Minjoor,mysterious, persons
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...