ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலைச்செல்வன் ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் அளித்துள்ள அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மாரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் அரசு மருத்துவர்கள் வேலை செய்யாமல் மருந்துகள், பஞ்சு உள்ளிட்டவைகளை திருடி ஊழல் செய்து வருவதாக அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
இது பொதுமக்களிடம் டாக்டர்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மாரிதாஸ் வெளியிட்டுள்ள அவதூறான வீடியோக்களை நீக்கவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.