×

சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறுகளை தடுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை : சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறுகளை தடுக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ விவகாரம் தொடர்பாக யூ-டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக
மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சமூக வலை தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : state governments , Social Websites, Religious, Defamation, Federal, State Governments, Order
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்