×

மேட்டுப்பாளையம் அருகே யானைகள் உயிரிழப்பு: சண்டையிட்டதால் காயமடைந்திருக்கலாம் என வனத்துறை தகவல்!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாடையில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கடந்த சில மாதங்களாக யானைகள் அதிகளவு பலியாகி வருகின்றன. அதில் பல யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். சில யானைகள் உடல்நல குறைவால் உயிரிழக்கின்றன. அந்த வகையில், மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை ஒன்று உயிரிழந்துள்ளது. மேட்டுப்பாளையம் காட்டுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது  ஆண் யானை ஒன்று நடக்கமுடியாமல் சிரமமடைந்ததை கண்டறிந்தனர். அந்த காயமடைந்த யானையுடன் மேலும் சில யானைகள் இருந்ததால் வனத்துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த யானை நெல்லிமலை காப்புக்காட்டில் நடக்கமுடியாமல் படுத்துக்கிடந்தது. இதனையடுத்து வனத்துறையினர் காட்டுயானைக்கு குளுக்கோஸ் ஏற்றி 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஆண்யானை இறந்து விட்டது. இதனைத்தொடர்ந்து காட்டுயானைகளுடன் ஏற்பட்ட சண்டையால் ஆண் யானைக்கு தாடையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தாடையில் பலத்த காயமடைந்ததால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு யானை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர், உயிரிழந்த காட்டுயானையை உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறையினர் நெல்லிமலை காட்டில் புதைத்துள்ளனர்.

Tags : Forest Department ,Elephants ,Mettupalayam ,department , Mettupalayam, elephants, casualties, forest department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...