சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.