திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அறிக்கை: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (31 ம் தேதி) மாலை 5.00 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன் தலைமையிலும், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், நடுகுத்தகை ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரி ஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எனவே காணொலி மூலம் நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆவடி சா.மு.நாசர் கூறியுள்ளார்.