×

வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் அண்ணன்-தம்பி பிடிபட்டனர்

ஆவடி: ஆவடி அருகே வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் அண்ணன், தம்பி இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த மோரை, பங்காருபேட்டை, ஆலத்தூர், மிட்டனமல்லி ஆகிய இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள், எல்.இ.டி டிவி, லேப்டாப் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து செல்வதாக ஆவடி டேங்க் பேக்டரி, முத்தாபுதுபேட்டை ஆகிய காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா மூலமாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் ஆவடியை அடுத்த மோரை, வினோ நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (30), அவரது தம்பி ஆதவன் (25) ஆகியோர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் மேற்கண்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5சவரன் நகைகள், இரு எல்இடி டிவி, ஒரு லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் தமிழ்ச்செல்வன் மீது தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் தமிழ்செல்வன், ஆதவன் ஆகியோரை கைது செய்தனர்.


Tags : Brother-in-law , Home burglary, in the case, brother-in-law, caught
× RELATED மது அருந்திவிட்டு மனைவியை அடித்ததை...