×

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக்கடையை உடைத்து, உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.4 ஆயிரம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில், கடையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று, கடையின் பின்புறம் அமர்ந்து, குடித்துவிட்டு காலி பாட்டில்களை, அங்கேயே வீசி சென்றது தெரிந்தது.

தகவலறிந்து மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அதில், பணம் கொள்ளை போகவில்லை, ரூ.4 ஆயிரம் மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடையில் சிசிடிவி கேமரா இல்லாததால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


Tags : Break ,store ,Tasmac , Tasmac store, broken into, looted
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்