×

சேலத்தில் தொடர் மழையால் குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

சேலம்:  சேலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, சேலத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து அவ்வப்போது தூறி கொண்டே இருந்தது. தொடர் மழை காரணமாக சேலத்தில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சேலம் அருணாசல ஆசாரி தெரு, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அண்ணா சிலைக்கு வரும் சாலை, இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோயில் சாலை, சீதாராம் செட்டி தெரு, நாராயண நகர் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Roads ,Motorists ,Salem , Salem, continuous rain, roads, motorists
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...