×

பழநியில் வெளுத்து வாங்கிய மழை: மக்கள் மகிழ்ச்சி

பழநி: பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று திடீரென சுமார் 1 மணிநேரம் கனமழை பெய்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மழை பெய்ததால் வாகனஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி கொண்டனர். கனரக வாகனங்கள் தங்கள் வாகனங்களின் முன்புற விளக்கை எரிய விட்டபடியே ஓட்டி சென்றனர். பேய்மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக, பழநி நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் குடிசை வீடு சரிந்து விழுந்தது. மேலும் பல வீடுகளின் முன்புறம் நடப்பட்டிருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன. நகரில் பல இடங்களில் சாலை சீரமைப்பு பணிக்காக பெரும்பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் பழநி பகுதியின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Palani , Palani, rain, people
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்