×

கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட செயலுக்கு துணை முதல்வர் கண்டனம்

சென்னை: கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.



Tags : Deputy Chief Minister ,burial ground ,Kanyakumari ,Anna , Kanyakumari, Anna statue, Deputy Chief Minister, condemned
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...