×

பெண்களை குறிவைக்கும் `மன்மத ராசாக்கள்’ வீடியோ காலில் குவியும் புகார்கள்

அண்ணாநகர்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் புகார்களை கொடுக்க காவல் நிலையங்களுக்கு நேரில் செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படி இருந்தும் ஒரு சிலர் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால் புகாரை வாங்காமல், “கொரோனா பணியில் உள்ளோம்” என்று சில போலீசார் சாக்கு போக்கு சொல்கின்றனர். இதேபோல், சமீப காலமாக அண்ணா நகர் மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம், ஐ.சி.எப், அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், கோயம்பேடு  ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வழிப்பறி, செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, கொலை, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதுதொடர்பாக அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் அண்ணா நகர் மாவட்ட எல்லை மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகரை பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார்கள் கொடுத்தனர். அதில், குடும்ப சண்டை, பெண்களை கேலி செய்வது, பெண்களிடம் செல்போன், செயின் பறிப்பது, காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தால் கொரோனா பணி என்று போலீசார் வழக்கு பதிவு செய்யமால் அழைக்கழிப்பது, புகார் கொடுப்பவர்களை இழிவாக பேசுவது, பெண்களுக்கு எதிராக வரும் புகார்களை ஒரு தலைபட்சமாக விசாரணை செய்வது, குடிபோதையில் ரவுடிகள் பொதுமக்களை அச்சுறுத்துவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் ஒரே நாளில் குவிந்தது. குறிப்பாக பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, காதல் தொல்லைகள் என பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்கள் குறித்து பெண்கள் தைரியமாக வாட்ஸ்அப் காலில் புகார் கொடுத்து வருகின்றனர். இதனால் பெண்களை குறிவைக்கும் ‘மன்மத ராசாக்கள்’ சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. 


Tags : women ,Cupid , Complaints, in the video footage of `Cupid Razas, 'targeting women
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...