×

மருத்துவமனைக்கு வெளியே கத்தியால் குத்தி கேரள நர்ஸ் படுகொலை அமெரிக்காவில் பயங்கரம்: கணவன் வெறிச்செயல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மருத்துவமனைக்கு வெளியே இந்திய நர்சு கத்தியால் குத்தியும், வாகனத்தால் மோதியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மெரின் ஜாய் (26). இவர், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த திங்களன்று இரவு பணி முடித்து நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அங்கு காரில் வந்த ஒருவர் மெரினை திடீரென கத்தியால் சரமாரியாக குத்தினார். பலமுறை கத்தியால் குத்தியதால் மெரின் அலறித் துடித்தபடி கீழே சரிந்தார்.

உடனடியாக, அந்த நபர் கீழே விழுந்து கிடந்த மெரின் மீது காரையும் ஏற்றி விட்டு தப்பி சென்றார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மெரின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால், சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் கார் பற்றி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், மெரினை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் விக்சனை சேர்ந்த பிலிப் மேத்யூ (34)என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் மெரினின் கணவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மெரினின் தோழி கூறுகையில், ‘‘மெரினும் பிலிப்பும் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர், தங்கள் உறவை முறித்து கொண்டனர்,’’ என்றார். அதனால், மெரின் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் பிலிப் இந்த கொலையை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், இதுபற்றி பிலிப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : nurse ,death ,hospital ,Kerala ,Terror ,US , Outside the hospital, stabbing, Kerala nurse, murder, USA, husband hysteria
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...