×

வாலிபருக்கு சரமாரி வெட்டு இரு தரப்பினர் மோதல்: எஸ்பியிடம் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோயில்  தென்மேல்பாக்கம் அம்பேத்கர் நகரில் கடந்த 23ம் தேதி, ஒரு விழா நடந்தது. இதில், கீழக்கரணையை சேர்ந்த 2 வாலிபர்கள் மேளம் வாசிக்க வந்தனர். அவர்களுக்கும், தென்மேல்பாக்கத்தை சேர்ந்த 2 பேருக்கு தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், தென்மேல்பாக்கம் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இருதரப்பினர் மீது மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் தென்மேல்பாக்கத்தை சேர்ந்த அஜய்குமார் (23) என்ற வாலிபர், சிங்கப்பெருமாள்கோயிலுக்கு நேற்று காலை சென்றார். அப்போது கீழக்கரணையை சேர்ந்த சிலர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அஜய்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து, தென்மேல்பாக்கம் கிராம மக்கள், செங்கல்பட்டு எஸ்பியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், இரு கிராமங்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. எனவே,தென்மேல்பாக்கம் பகுதி மக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தென்மேல்பாக்கத்தில் பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : SP ,teenager , Teenager, volley cut, bipartisan conflict, sp, complaint
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...