×

கட்டுக்கடங்காத கொடூர நச்சுயிரி கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 82 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,741-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,927 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,72,883-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Corona , Corona, Tamil Nadu, confirmed infection
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...