சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தை நீடிப்பதா இல்லையா என ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின் முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.